திருப்பூர்: தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்களுக்கு இனி அனுமதி இல்லை என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் தனிமனித இடைவெளியின்றி மக்கள் கூடியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு நீங்கலாக இதர நாட்களில் பொதுமக்களுக்காக தென்னம்பாளையம் மீன் மார்க்கெட் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.