டெல்லி: செப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு இருந்ததால், மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகை கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்பித்து வரும் சூழலில் மீண்டும் எப்போது பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த ஊரடங்கு தற்போது 30ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில்,கர்நாடகத்தில் ஜூலை மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது.
Tags : School ,colleges ,India ,Union minister , India, Months, Then, September, School, Colleges, Opening, Union Minister, Information, Students, Happiness