×

இந்தியாவில் 5 மாதங்களுக்கு பின்னர் செப்டம்பரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு : மத்திய அமைச்சர் தகவலால் மாணவர்கள் மகிழ்ச்சி!!

டெல்லி: செப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.   கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு இருந்ததால், மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகை கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்பித்து வரும் சூழலில் மீண்டும் எப்போது பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த ஊரடங்கு தற்போது 30ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில்,கர்நாடகத்தில் ஜூலை மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது.

கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளை ஆகஸ்ட் மாதம் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேனிலை வகுப்புகள் ஆகஸ்ட் மாதமும், கீழ்நிலை வகுப்புகள் செப்டம்பர் மாதமும்  தொடங்கும் என்ற தகவல்கள் உலா வந்தன. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் அனைத்து வித தகவல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக,செப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.


மேலும் தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றும், ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறந்தாலும் சமூக இடைவெளியுடன் எவ்வாறு பள்ளிகளை நடத்துவது என்பது தொடர்பாக ஆய்வு நடைபெறுகிறது என விளக்கம் அளித்துள்ளார். கோவிட்-19 தொற்று செப்டம்பர் மாதத்தின் மத்தியில் முடிவுக்கு வரலாம் என சுகாதார அமைச்சகத்தின் இரு பொது சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கணிதமுறை மாதிரி ஆய்வின் படி அவர்கள் இதைக் கூறுவதாகத் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையிலும் பள்ளி, கல்லூரிகளை செப்டம்பர் மாதத்தில் திறக்க அரசு முடிவெடுத்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : School ,colleges ,India ,Union minister , India, Months, Then, September, School, Colleges, Opening, Union Minister, Information, Students, Happiness
× RELATED தீயணைப்பு துறையினர் அணைத்தனர்...