கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. முதல்வர் உத்தரவின் பேரில் அமைச்சர் வேலுமணி, துணை சபாநாயகர் ஜெயராமன் மலர்தூவி தண்ணீரை திறந்தனர். அணையிலிருந்து இன்று முதல் அக்டோபர் 31 வரை 146 நாட்கள் 1,156 மில்லியன் கனஅடி நீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. ஆழியாறு அணையிலிருந்து திறக்கப்படும் நீரால் ஆனைமலை வட்டத்தில் 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.