×

வரும் 11ம் தேதி முதல் பள்ளி மாணவர் விடுதிகள் திறப்பு: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை. 2019 - 2020ம் கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு வரும் 15ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. இதை முன்னிட்டு,  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 12 பள்ளி விடுதிகள் வரும் 11ம் தேதி திறக்கப்பட உள்ளன. இந்த விடுதிகளில் மாணவ, மாணவிகள் தங்கி அரசு பொதுத் தேர்வு எழுதும் வகையில், நோய்த்தொற்று ஏற்படாதவாறு, விடுதிகள் நன்கு தூய்மை செய்யப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு விடுதிகளில் தங்கி 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை எழுதலாம் என கூறப்பட்டுள்ளது.



Tags : Collector Information ,First School Student Hostels , Opening , First School Student Hostels ,11th, Collector Information
× RELATED 9, 10ம் வகுப்பு மாணவிகள் கல்வி...