×

பாலாற்றில் மணல் கொள்ளை: லாரி, பைக் பறிமுதல்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே பாலாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட லாரி, பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். உத்திரமேரூர் அடுத்த பினாயூர் கிராமத்தை ஒட்டியுள்ள பாலாற்று படுகையில் நேற்று முன்தினம் இரவு மணல் கொள்ளை நடப்பதாக சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, தீவிர சோதனை நடத்தினர். அப்போது பைக் மூலம் லாரியில் மணல் ஏற்றி கொண்டிருந்ததை பார்த்தனர். உடனே போலீசார், அந்த வாகனங்களை சுற்றி வைளத்தனர். போலீசாரை கண்டதும் லாரி டிரைவர் தப்பிவிட்டார். இதையடுத்து போலீசார், லாரி மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து, காவல் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Balor ,Larry , Sand burglary , Balor,Larry, bike confiscated
× RELATED லாரி மோதி மாணவர் பலி