×

திமுக ஆட்சி அமைந்தபிறகு ஸ்டெர்லைட்டை திறக்க மாட்டோம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: திமுக ஆட்சி அமைந்தவுடன் ஸ்டெர்லைட் ஆலை எப்போதும், எந்த சூழலிலும் திறக்கப்படாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, நேற்று தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:  ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பங்கேற்று திமுகவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர். மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம். அதற்கான மின்சாரத்தை வழங்கலாம் என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இம்முடிவு தற்காலிகமானதுதான். திமுக ஆட்சி அமைந்தபிறகும் நச்சு ஆலையான ஸ்டெர்லைட் எப்போதும் எந்தச் சூழலிலும் திறக்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post திமுக ஆட்சி அமைந்தபிறகு ஸ்டெர்லைட்டை திறக்க மாட்டோம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Tags : Sterlite ,Kanjagar ,President of the President of the Kjagar ,G.K. ,Stalin ,Chennai ,Djagam ,President of the ,MC ,G.K. Stalin ,Kjagar ,President of the President of the Kanjagar ,B.C. ,
× RELATED ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற...