×

10-ம் வகுப்பு தேர்வில் காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு விலக்கு?...அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

சென்னை: காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வில் இருந்து விலக்களிப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 10ம் வகுப்பு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் வகுப்பறை உருவாக்கபட்டுள்ளது. தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கும் மற்றும் மாணவர்கள் 9.45க்குள் வர வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார். ஜூன் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, 11-ல் 11 ஆம் வகுப்பு மற்றும் 18-ல் 12 ஆம் வகுப்பு நிலுவைத் தேர்வுகள் தொடங்கும் நிலையில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

மேலும், இன்று முதல் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு ஹால் டிக்கெட்களை பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டுடன் 2 முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது; காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இருந்து விலக்களிப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதையடுத்து 10 ஆம் வகுப்பு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் வகுப்பறை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், 10 ஆம் வகுப்பு தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்றும் மாணவர்கள் 9.45 க்கு வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Sengottaiyan , 10th Class Examination, Fever, Students, Minister Senkottaiyan
× RELATED அதிமுகவுடன் கூட்டணியா?… எடப்பாடியுடன் உரையாடிய ஜி.கே.மணி