×

பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடம்; கொரோனா பரவலை தடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைப்பு...முதல்வர் பழனிசாமி உத்தரவு...!

சென்னை; இந்தியா உள்ளிட்ட 210 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு குறைவாகவுள்ள இடங்களில் கடந்த 14-ம் தேதி கிழமை முதல் பல்வேறு தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால்,  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் தினமும் பாதிப்பு எண்ணிக்கை 1000 கணக்கில் உயர்ந்து வருகிறது.

இருப்பினும், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க 15 சிறப்பு மருத்துவர்கள் கொண்டு மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு பணி, ஒருங்கிணைத்தல், மீட்பு பணிகளை மேற்கொள்ள 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மைத்துறை உதயகுமார், போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.



Tags : Tamil Nadu ,ministers ,spread , Tamil Nadu continues to be 2nd in impact; 5 ministers to prevent coronal spread
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...