மதுரை: தமிழகத்துக்குள் பாலைவன வெட்டுக்கிளிகள் வராமல் தடுக்க முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வருவதற்கான வாய்ப்பு குறைவு எனவும் நீதிமன்றத்தில் அரசு பதில் மனு அளித்துள்ளது. வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பை ஏற்படுத்த கோரிய வழக்கை உயர்நீதிமன்ற கிளை முடித்து வைத்தது.