×

நாடாளுமன்றத்தில் எம்பிக்களின் பிஏக்களுக்கு தடை

புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் பாதுகாப்பு கருதி எம்பிக்களின் பிஏக்கள் நாடாளுமன்றத்திற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கூட்டத் தொடர் நடக்கும் சமயத்தில் நாடாளுமன்றத்தில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க எம்பிக்களின் பிஏக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களவை தலைமை செயலாளர் ஸ்நேகலதா ஸ்ரீவஸ்தவா நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘கொரோனா பாதிப்பால், எம்பிக்களின் பாதுகாப்பு கருதி அவர்களின் பிஏக்கள் நாடாளுமன்றத்திற்கு வர தடை விதிக்கப்படுகிறது.

கூட்டத்தொடர் நடக்கும் சமயத்தில் சுமார் 800 பிஏக்கள் வருவார்கள் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே மறுஉத்தரவு வரும் வரை பிஏக்கள் நாடாளுமன்றத்திற்கு வராமல் ஒத்துழைப்பு தர வேண்டும்’’ என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதே போல, நாடாளுமன்ற அலுவலகத்தின் ஓய்வு பெற்ற அதிகாரிகள், தற்போதைய அதிகாரிகளின் உறவினர்கள், பார்வையாளர்கள் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : MPs ,Parliament , Prohibition , MPs' BAs, Parliament
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...