×

கொடைக்கானலில் கூட்டமாக வலம் வரும் காட்டெருமைகள்: மக்கள் அலறியடித்து ஓட்டம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் கூட்டம் கூட்டமாக வலம் வரும் காட்டெருமைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொடைக்கானல் நகரில் காட்டெருமைகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட்டம், கூட்டமாக வலம் வருகின்றன. காட்டெருமைகள் முட்டி  பலர் காயம் அடைந்துள்ளனர். ஒரு சிலர் இறந்துள்ளனர். எனினும் வனத்துறை, காட்டெருமைகளை வனத்திற்குள் நிரந்தரமாக விரட்ட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அண்ணா சாலை பகுதியில் நேற்று காலை 9 காட்டெருமைகள் புகுந்தன. இவற்றை பார்த்ததும் சாலையில் நடமாடிய பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். பொதுமக்களை பார்த்து காட்டு மாடுகளும் மிரண்டு மூஞ்சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளி சாலை பகுதியில் ஓடின. இதை கண்டு அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். காட்டெருமைகள் வனப்பகுதிக்குள் சென்ற பிறகுதான் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘காட்டெருமைகள் மிரண்டு ஓடியதால், நாங்களும் உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடினோம்.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் இந்நிலை எப்பவும் இருக்காது. வனத்துறையினர் காட்டெருமைகளை வனத்திற்குள் நிரந்தரமாக விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காட்டெருமைகள் வனத்தில் இருக்க உணவு, தண்ணீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றனர்.

Tags : Crowds ,Kodaikanal ,forests , Kodaikanal, forests
× RELATED கொடைக்கானல் மஞ்சூர், பெருமாள்மலை...