×

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள்: கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு: செங்கை எம்எல்ஏ வழங்கினார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஒழலூர் ஊராட்சியில், முன்னாள் திமுக தலைவர் கருணாநி தியின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. காட்டாங்கொளத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் எம்.கே.தண்டபாணி தலைமை வகித்தார். ஊராட்சி திமுக செயலாளர் ஒ.இ.ஈஸ்வரி முன்னிலை வகித்தார். செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் ஆப்பூர் சந்தானம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், பத்மநாபன் குன்றத்தூர் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் இ.சிலம்புசெல்வன், டேவிட், சீனுவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.இதேபோல் செங்கல்பட்டு நகர திமுக சார்பில் நகர செயலாளர் எஸ்.நரேந்திரன் தலைமையில் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் கட்சி கொடி ஏற்றி, இனிப்பு வழங்கப்பட்டது. மறைமலைநகர் நகர திமுக சார்பில், நகர செயலாளர் ஜெ.சண்முகம், 21வது வார்டில் திமுக கொடியேற்றி இனிப்பு வழங்கினார். திமுக நிர்வாகிகள் சீனுவாசன், டி.கே.கமல் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியின் அனைத்து வார்டு, கிளைகளிலும் திமுக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.



Tags : Karunanidhi ,birthday ,DMK ,public ,party , Former DMK leader Karunanidhi, birthday, party flag, Chengai MLA
× RELATED திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்...