காஞ்சிபுரம்: முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரையில் உள்ள நூற்றாண்டு அண்ணா நினைவுத்தூண் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.காஞ்சி வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம், எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு, கொரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 97 ஆட்டோ டிரைவர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் ஆகியவை வழங்கினர்.
தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், ஒன்றிய செயலாளர் குமணன், ஒன்றிய அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் சசிக்குமார், மகாவீர் சந்த், ராம்பிரசாத், எஸ்.பி.ரமேஷ், பி.எம்.நீலகண்டன், பி.எஸ்.விஜயகுமார், தமிழ்செல்வன், லட்சுமணன், சேகர், யுவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் அரசு மருத்துவமனையில் ஜூன் 3ம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கார்த்திகேயன் தலைமையில், தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார்.
வழக்கறிஞர்கள் தம்பிதுரை, முருகன், பார்த்தசாரதி, துரைமுருகன், அரவிந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர். அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் தம்பு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், ஊராட்சி செயலாளர் சிவ.பழனி ஏற்பாட்டில் 500 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.