சென்னை: பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளதால் சக ஐஏஎஸ் அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர். சென்னையில் தொழில் சார்ந்த துறையில் பணியாற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று அறிகுறி ஏற்பட்டுள்ளதால், பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு தொற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் சக ஐஏஎஸ் அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்கள், தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதால் மற்ற ஊழியர்களுக்கு தெரியாமல் உள்ளது. அதேபோன்று தலைமை செயலக ஊழியர்களும் கொரோனா வைரசால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.