×

சென்னையை தனிமைப்படுத்த திருமாவளவன் அறிவுறுத்தல்

அரியலூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், அரியலூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை  மத்திய அரசு ரத்aது செய்ய வேண்டும். வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்டு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து எடுக்க வேண்டும். சென்னையில் அதிக அளவில் கொரோனா தொற்று கண்டறியப்படுவதால் சென்னை மாநகரத்தை தனிமைப்படுத்தி அதிகமாக பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.



Tags : Thirumavalavan ,Chennai , Thirumavalavan , isolate ,Chennai
× RELATED தினமும் பொய் பேசும் அரசியல் காமெடியன் அண்ணாமலை: திருமாவளவன் விளாசல்