சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கருத்துரிமைக்கு எதிராக நடைபெறும் வன்முறை தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். ‘காட்மேன்’ இணைய தள தொடருக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகள் மீது தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு, இது தொடர்பான வழக்கை ரத்து செய்து, கருத்துரிமை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.