சென்னை: மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: ஊரடங்கு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மற்றும் மின்சாரத்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, 25.3.2020 முதல் 5.7.2020 வரை மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்ட தாழ்வழுத்த நுகர்வோர்கள் தங்களது மின்இணைப்பிற்கான மின்கட்டணத்தை 6.7.2020 வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின்இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள தாழ்வழுத்த நுகர்வோர்களின் மின்கட்டணம் செலுத்தும் கடைசி தேதி 25.3.2020 முதல் 14.6.2020 வரை இருப்பின் அவர்கள் 15.6.2020 வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின்இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.