×

கொரோனாவால் சாவு உடலை புதைக்க மக்கள் எதிர்ப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மேற்கு மாட வீதியில் 86 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தார். அவரது உடலை திருவொற்றியூர் கடற்கரை சாலையில் உள்ள பட்டினத்தார் கோயில் தெருவில் உள்ள சுடுகாட்டில் புதைப்பதற்காக அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அங்கு 10க்கும் மேற்பட்ட கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதாக வதந்தி பரவியது. இதையறிந்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சுடுகாடு வாசலில் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த திருவொற்றியூர் போலீசார் ேபச்சுவார்த்தை நடத்தியதையடுத்து  பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Tags : Corona Corona , Corona, death, people protest
× RELATED கொரோனாவுக்கு பூ வியாபாரி பலி