திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த சத்தரை கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசு. இவரது மகள் ரோகிதா (20). காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைபாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், ஊரடங்கால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அவர், நேற்று முன்தினம் செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இதை அவரது தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், தனது அறைக்குச் சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.