×

திருப்பத்தூரில் கந்துவட்டி கொடுமையால் எலிமருந்து சாப்பிட்ட 4 பேரில் 12 வயது சிறுமி உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் கந்துவட்டி கொடுமையால் எலிமருந்து சாப்பிட்ட 4 பேரில் 12 வயது சிறுமி உயிரிழந்தது. அண்ணாமலை என்பவர் மகள் ரேணுகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மளிகை கடை உரிமையாளர் அண்ணாமலை, பலரிடம் கடன் வாங்கிய நிலையில் கந்துவட்டி கொடுமைக்கு ஆளானார். நேற்று தனது 2 மகள்கள், மனைவியுடன் அண்ணாமலை எலிமருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். 4 பேரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் 12 வயது சிறுமி உயிரிழந்தார்.


Tags : Tirupathur , Thiruppathur, Kanduvatti, and little girl deaths
× RELATED வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா!:...