திருவனந்தபுரம்: சவுதி, குவைத், கத்தார் உட்பட வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான மலையாளிகள் உள்ளனர். வளைகுடா நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. இதில் மலையாளிகள் பலரும் பலியாகி வருகின்றனர். பெரும்பாலானோர் தொழிலாளர் முகாம்களில் தங்கி இருப்பதால் இவர்களுக்கு ேநாய் எளிதில் பரவுகிறது. ேமலும் உடனடியாக சிகிச்சை கிடைப்பதில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக கேரளத்தை சேர்ந்த ஏராளமாேனார் கொரோனாவுக்கு பலியாகின்றனர். கடந்த 2 நாட்களில் மட்டும் ேகரளத்தை சேர்ந்த 14 பேர் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர். இதையடுத்து கடந்த இரண்டரை மாதங்களில் வளைகுடா நாடுகளில் ெகாரோனா பலி வாங்கிய மலையாளிகளின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது.