×

இடி தாக்கி பெண் விவசாயி பலி

திருவள்ளூர்: கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த திருவூர் கிராமத்தை சேர்ந்த பக்தராஜன் மனைவி கோமளா(38) என்கிற விவசாய பெண்மணி, தன்னுடைய விவசாய நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது பெய்த கனமழையால் விவசாய நிலத்திற்கு சென்ற கோமளா மீது இடி தாக்கியதில், அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு செவ்வாய்பேட்டை போலீசார் விரைந்து சென்று, கோமளாவின் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இடிதாக்கி பலியான பெண் விவசாயிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Woman farmer ,Thunder , Woman farmer, kills woman, thunder
× RELATED அபிஷேக் நாமா இயக்கும் மாயாஜால படம் நாகபந்தம்