×

ஊரடங்கு நேரத்தில் தேர்பவனி 30 பேர் மீது வழக்கு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பன்னூர் கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. ஆண்டுதோறும் தேவாலய விழாவையொட்டி தேர் பவனி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தேவாலய விழா நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தேவாலயத்தில் இருந்து சிறிய தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தகவல் அறிந்ததும் மப்பேடு போலீசார் விரைந்து சென்று தேர் பவனியை தடுத்து நிறுத்தி உடனடியாக தேரை தேவாலயத்திற்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தேர்பவனி பாதியில் முடிந்தது. இதுகுறித்து மப்பேடு போலீசார், திருப்பந்தியூர் ஊராட்சி துணை தலைவர் ஆல்பர்ட், தேவாலய நிர்வாகிகள் பாக்கியராஜ், லீமா ரோஸ் உள்பட 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : curfew , 30 people, sued during, curfew
× RELATED ஹல்தாவணியில் ஊரடங்கு உத்தரவு அமல்