×

ஏரியில் மூழ்கி வாலிபர் பலி

பல்லாவரம்: பம்மல், நாகல்கேணி பக்தவச்சலம் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (எ) அப்பு (23). இவர் நேற்று நண்பர்களுடன், திருநீர்மலை அருகேயுள்ள நைனாக்கூர் ஏரிக்கு சென்றார். அங்கு, அனைவரும் குளித்தபோது, மணிகண்டன் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்றதால் சேற்றில் சிக்கி, தண்ணீரில் தத்தளித்துள்ளார். இதனை கண்ட நண்பர்கள் அவரை மீட்க முயன்றனர். அதற்குள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தாம்பரம் தீயணைப்பு படையினர் 2 மணி நேரம் போராடி உடலை மீட்டனர். சங்கர் நகர் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Tags : lake Youth ,lake , Youth ,drowns , lake
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு