சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அந்தமானில் சிக்கித் தவித்த 43 மீனவர்கள் தமிழகம் திரும்பினர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 161 தொழிலாளர்கள், 43 மீனவர்கள் கப்பலில் சென்னை வந்தடைந்தனர். தமிழகம் திரும்பிய மீனவர்கள், தொழிலாளர்கள் சிறப்புப் பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.