×

கோவையில் திருடுபோன பைக் பார்சலில் வந்தது.:பைக்கை திருடியவரே பார்சலில் அனுப்பி வைத்தார்

கோவை: கோவையில் இருச்சக்கர வாகனத்தை திருடிய இளைஞர் இரண்டு வாரங்களுக்கு பின்னர் வாகனத்தை அதன் உரிமையாளருக்கு பார்சலில் அனுப்பி வைத்து இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.கோவையை அடுத்து உள்ள சூலூர் அருகே பள்ளபாளையத்தை சேர்ந்த சுரேஷ் என்பவற்றின் இருசக்கர வாகனம் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருடுபோனது.

சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தலில் அதே பகுதியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்த இளைஞர் இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் திருடுபோன இருசக்கர வாகனம் உரிமையாளருக்கே பார்சலில் அனுப்பி வைத்துள்ளார். ஊரடங்கின் போது சொந்த ஊருக்கு செல்வதற்காக டீ கடை மாஸ்டர் இருசக்கர வாகனத்தை எடுத்து சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. திருடுபோன இருசக்கர வாகனம் பார்சலில் திரும்பி வந்தது அதன் உரிமையாளருக்கு ஆச்சிரியத்தையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.


Tags : Goa ,parcel , bike,stolen, expression , parcel,Bike,
× RELATED தேர்தல் விதிமுறையை மீறி அண்ணாமலை...