சென்னை: சென்னை கே.கே.நகரில் திமுக சார்பில் வழங்கிய நிவாரண உதவிகளை பெற வந்த பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர். சென்னை கே.கே.நகரில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. நிவாரண உதவிகளை பெற வந்த மக்கள் மீது தடியடி நடத்திய போலீசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.