டெல்லி: மக்களின் ஒத்துழைப்பே கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கிய காரணம் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மேலும் தனிமனித இடைவெளியை கடைபிடித்தால்தான் கொரோனாவில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்த அவர் மதுரையில் சலூன் கடை நடத்தி வரும் மோகன் என்பவர் செய்த நிவாரண உதவி குறித்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.