×

மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.:நாளை கடலுக்கு செல்வதில்லை என மீனவர்கள் முடிவு

சென்னை: தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிந்தும் தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 23 தேதி முதல் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. எனவே 61 நாட்கள் உள்ள மீன்பிடி தடைகாலத்தை ஊரடங்கு காரணமாக 47 நாட்களாக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

ஊரடங்கு காரணமாக துறைமுகத்துக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி இருந்த மீனவர்கள் படகுகளை சீரமைக்கும் பணிகளை இன்னும் முடிக்கவில்லை. அதுபோல் ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பிய வெளிமாநில தொழிலாளர்கள் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் கடலுக்கு சென்று பிடித்துவரும் மீன்களை விற்பனை செய்வதிலும் சிக்கல் நீடிக்கிறது.

பொதுவாக ஆழ்கடலில் பிடிக்கப்படும் மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால் இதற்கும் வழியில்லாததால் மீனவர்கள் கடலுக்கு செல்லலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் மீனவர்கள் உள்ளனர். இதனால் நாளை மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை என்று மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.



Tags : Fishermen ,sea , Fishermen, decision , sea ,tomorrow
× RELATED பா.ஜ நிர்வாகிகளை விரட்டியடித்த மீனவர்கள்