டெல்லி: ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திரமோடி தமது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். பிரதமர் உடனான ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். நாளை உடன் ஊரடங்கு முடியும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.