×

கடைகளில் இரவு 7 மணிக்கு மேல் வியாபாரம் செய்தால் கடும் நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன் வெளியிட்ட அறிக்கை:  திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறியதால், சில வணிக நிறுவனங்கள், கடைகளை போலீசார் எச்சரிக்கை செய்து, கடை விபரங்களை கொடுத்துள்ளனர். எவ்வித பிரச்னையும் வராமல் தடுக்க, விதிமுறைகளை கடுமையாக கடை உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள், கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை, கடைக்குள் அனுமதிக்க கூடாது.

எக்காரணத்தை கொண்டும், இரவு 7 மணிக்கு மேல் வியாபாரம் செய்ய வேண்டாம். விதிமீறல்கள் இருந்தால் மாவட்ட போலீசாருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு பாதுகாப்பாக வணிகத்தை தொடருங்கள் என கூறப்பட்டுள்ளது.

Tags : stores ,SP , Stores, Business, S.P. aravindan
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்