பூந்தமல்லி: மதுரவாயல் கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று விட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து 6 லட்சம், 5 சவரன் நகை கொள்ளைபோயிருந்தது. இதேபோல், ஆலப்பாக்கத்தில் உள்ள தனியார் பத்திரிகை அலுவலகத்தில் பூட்டை உடைத்து கேமரா மற்றும் கம்ப்யூட்டர்கள் திருடப்பட்டிருந்தது. மேற்கண்ட சம்பவங்கள் குறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிபாண்டியன் (37), முருகன் (50) ஆகியோரை கைது செய்தனர்.