×

கடையம் அருகே முள்ளிமலையில் தீ: அரியவகை மூலிகை செடிகள் கருகின

கடையம்: கடையம் அருகே முள்ளிமலை பொத்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் அரியவகை மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின.  தென்காசி மாவட்டம், கடையம் அருகே மீனாட்சிபுரம் முள்ளிமலை பொத்தையில் காட்டுப்பன்றி, கரடி, மிளா, மான் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் முள்ளிமலையின் வடக்கு பகுதியில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்து கடையம் வனச்சரகர் நெல்லை நாயகம் தலைமையில் பயிற்சி வனச்சரக அலுவலர்கள் தினேஷ்குமார், அஜய், சம்பத், ரவி பெருமாள், வனவர் முருகசாமி, வனக்காவலர்கள் ரமேஷ்பாபு, ஜெயா, வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் விரைந்து வந்து மாலை 6 மணி வரை போராடி தீயை அணைத்தனர்.  ஆனால், அதற்குள் அங்கிருந்த அரியவகை மூலிகை செடிகள் எரிந்து நாசமாகினது. தீ விபத்திற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


Tags : fire ,stall ,herb plants ,Shop , Mullimalai fire, shop
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா