சென்னை: 12 மண்டல அளவிலான சிறப்பு பணிக்குழு அமைத்து கொரோனா பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார். தமிழக அரசின் செலவில் 170 ரயில்களில் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தொழில்துறைகளுக்கு அளிக்க வேண்டிய தளர்வுகள் குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது என பேட்டியளித்துள்ளார்.