×

40 வீரர்களை பலி கொண்ட புல்வாமா தாக்குதலை போன்ற மற்றொரு தாக்குதல் முறியடிப்பு : காரில் இருந்த 20 கிலோ வெடிப் பொருட்கள் பாதுகாப்பாக வெடித்து அழிப்பு

ஸ்ரீநகர்  : ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்த இருந்த தாக்குதல் திட்டம் பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறையின் தகவலை அடுத்து புல்வாமா மாவட்டம் ராஜ்போராவில் நேற்று இரவு ஆர்பிஎப் மற்றும் ராணுவ வீரர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது, அவ்வழியாக வந்த கார் ஒன்று நிற்காமல் சென்றுள்ளது. ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதால் ஓட்டுநர் தப்பிவிட்டார்.காரின் பின் இருக்கையில் 20 கிலோ வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. காரை நகர்த்தினால் வெடித்து விடும் என்பதால் கார் அப்படியே வெடிக்க செய்யப்பட்டது. இதன் டிரோன் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
போலி வாகன எண் கொண்ட காரில் தீவிரவாதி வந்தது விசரணையில் தெரியவந்துள்ளது. காஷ்மீரில் கடந்த 2 மாதங்களாக தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது அதுபோன்ற பயங்கரவாத சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.

Tags : attack ,soldiers ,Pulwama , Pulwama, Attack, Breakdown, Car, Explosives, Safe, Explosive, Destructive
× RELATED காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்குப்...