டெல்லி : வீர சாவர்க்கரின் பிறந்த நாளில் அவரது துணிவிற்கு தலை வணங்குகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் இந்துத்துவா சித்தாந்த வீரரான வீர சாவர்க்கரின் பிறந்த நாளான இன்று அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் “வீர சாவர்க்கரின் பிறந்த நாளில் அவரது துணிவிற்கு நான் தலை வணங்குகிறேன். அவரது துணிச்சல், சுதந்திர போராட்டத்தில் பலரும் இணைய அவர் அளித்த ஊக்கம், சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்திய பண்பு ஆகியவற்றுக்காக அவரை நாம் நினைவு கூர்கிறோம்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வீடியோ பதிவு ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.அதில் வீர சாவர்க்கரின் சாதனைகளையும், சுதந்திரத்திற்கு ஆற்றிய பணிகளையும் பிரதமர் மோடி விவரித்துள்ளார்.அவர் தனது மே, 2018 “மான் கி பாத்” வானொலி நிகழ்ச்சியின் கிளிப்பைப் பகிர்ந்து கொண்டார், அதில் அவர் சாவர்க்கரைக் குறிப்பிட்டார்.“1857’ஆம் ஆண்டின் நிகழ்வுகளை ஒரு கிளர்ச்சி அல்லது ஒரு வீரர்களின் கலகம் என்று மட்டுமே நாம் நீண்ட காலமாக அழைத்துக் கொண்டிருப்பது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. 1857’இல் நடந்தது ஒரு கிளர்ச்சி அல்ல, அது முதல் சுதந்திரப் போர் என்று தைரியமாக வெளிப்படுத்தியவர் வீர் சாவர்க்கர் தான்.” என்று அவர் கூறினார்.