டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல எத்தனை நாட்களாகும்? என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்வது தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. ஒரு நாளைக்கு 3.36 லட்சம் தொழிலாளர்கள் வீதம் 47 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றுள்ளனர்.