×

திருமழிசை பேரூராட்சியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் முகக் கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.   இதையொட்டி பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் (பொறுப்பு) எம்.சங்கர் மேற்பார்வையில் திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலர் வ.பிரேமா தலைமையில்  இளநிலை உதவியாளர் ஜோசப்,  துப்புரவு மேற்பார்வையாளர் பாண்டியன்  மற்றும்  பேரூராட்சி பணியாளர்கள் முகக்கவசம் அணியாத கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களையும், இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டி வந்தவர்களையும் சோதனை செய்தனர். அப்போது முகக் கவசம் அணியாதவர்களுக்கு 100 அபாரதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ. 2 ஆயிரத்து 400 வசூலிக்கப்பட்டது.   


Tags : Thirumazhisi panchayat, mukakavacam, fine
× RELATED பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த...