×

இரண்டு வாரங்களில் 27 ரவுடிகள் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் எஸ்பி சாமுண்டீஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க எஸ்பி சாமுண்டீஸ்வரி உத்தரவிட்டார். அதன்படி, கடந்த 8ம் தேதி  முதல் 25ம் தேதி வரை ராஜா (எ) வசூல் ராஜா, சந்துரு (எ) சந்திரசேகர், ஹரி (எ) மார்க்கெட் ஹரி, பரத், தியாகு (எ) தியாகராஜன், ஜெய்சங்கர் (எ) சதீஷ்குமார் (எ) பெரியவா (25).சதீஷ் (24).

யுகேஷ் (17), யுவராஜ் (24), பாலமுருகன் (23), இன்பரசு (32), சுரேஷ்குமார் (22), தியாகு (எ) தியாகராஜன் (31), சுரேஷ் (எ) மிலிட்டரி சுரேஷ் (40), ராஜசேகர் (24), பரத் (எ) கபாலி (22), பிரேம்குமார் (22), சீனிவாசன் (30), ஜமால் உள்பட 27 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், 12 பேர், திருந்தி வாழ வாய்ப்பளித்து சப் கலெக்டர் சரவணன் முன்பு ஆஜர்படுத்தி, எழுத்து மூலமாக நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

Tags : 27 suspects arrested
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி