சென்னை: கலைஞர் அறக்கட்டளை சார்பில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 16 பேருக்கு தலா 25 ஆயிரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ₹5 கோடியை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக்கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது வங்கியின் வட்டி விகிதம் குறைந்துள்ளதால்2020, மார்ச், ஏப்ரல் ஆகிய 2 மாதங்களுக்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 16 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் 4 லட்சம் கடந்த 27ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிதிபெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது.