சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அரசு நிர்ணயித்த விலையில் தான் மதுபானங்கள் விற்கப்படுகின்றனவா? எனவும் கேட்டுள்ளது. மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா? என ஜூன் 26ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.