×

பாதுகாப்பு உபகரணம் கேட்ட தூய்மை பணியாளரின் இடமாற்றத்திற்கு தடை

மதுரை: பாதுகாப்பு உபகரணங்கள் கேட்ட தூய்மை பணியாளரின் இடமாற்றத்திற்கு ஐகோர்ட் கிளை இடைக்காலத்தடை விதித்துள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாலு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி, பூட்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள்  வழங்கப்படவில்லை. இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியதால் என்னை மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிக்கு இடமாற்றம் செய்தனர். இதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜெ.நிஷாபானு, மனுதாரரின் பணியிட மாற்றத்திற்கு தடை விதித்தார்.


Tags : Safety Equipment, Cleaning Worker, Prohibition
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...