×

கொரோனாவுக்கு விஏஓ மரணம்

பெரும்புதூர்: சென்னை சவுகார்பேட்டை, பெருமாள் கோயில் தோட்டம் 5வது தெரு சேர்ந்த 35 வயது வாலிபா், பெரும்புதூா் தாலுகா சிவபுரம் மற்றும் ஒரகட மகாதேவி மங்கலத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை செய்து வந்தார்.கடந்த 18ம் தேதி வாலிபருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பின்னர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது, அவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்தபோது, கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தது. இதைதொடர்ந்து அவர் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கு அவரை பரிசோதனை செய்ததில், கொரோனா உறுதியானது. அங்கு அவரை தனிப்படுத்தி சிகிச்சை அளித்தனர். ஆனால் நேற்று மதியம் அந்த வாலிபர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.  ஆனால், இறந்த வாலிபர் மாரடைப்பால் இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.


Tags : death ,VAO ,Corona , VAO death , Corona
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!