×

ரவுடிக்கு அரிவாள் வெட்டு: 4 பேர் கைது

ஆவடி: ஆவடி அடுத்த பட்டாபிராம் தண்டுரையை சேர்ந்தவர் பில்லா சுரேஷ் (24). பிரபல ரவுடி. இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் நண்பர்களான ராஜசேகர், டேவிட் ஆகியோருடன் குடிபோதையில் அன்னம்பேடு கிராமத்துக்கு சென்று அங்கு நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து அவரை தட்டி கேட்டனர். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில், சில வாலிபர்கள் பில்லா சுரேசை சரமாரியாக கல்லால் அடித்தனர்.

இதனையடுத்து, அவரது நண்பர்கள் ராஜசேகர், டேவிட் ஆகியோர் அங்கிருந்து தப்பினர். பின்னர், பில்லா சுரேஷை சில வாலிபர்கள்  கட்டி வைத்து அரிவாளால் வெட்டினர். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்த பட்டாபிராம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரை மீட்டு சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் அன்னம்பேடு,  மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பிரபல ரவுடிகள் பரத் (30), பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பார்த்திபன் (24), பிரதீப் (24), பன்னீர்செல்வம் (29) ஆகியோரை கைது செய்தனர்.


Tags : Rowdy , Rowdy , 4 arrested
× RELATED குண்டர் சட்டத்தில் ரவுடி கைது