சென்னை: சிலிண்டர் டெலிவரி பணியாளர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் சிலிண்டர் டெலிவரி செய்பவர்களுக்கு ரூ.25 லட்சம் காப்பீடு செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.