×

நெல்லையில் நாளுக்கு நாள் உயரும் கொரேனா தொற்று: ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா உறுதி

நெல்லை: நெல்லையில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் தீவிரமடைந்து உள்ளது.  இதுவரை 17 ஆயிரத்து 82 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.  8 ஆயிரத்து 731 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 118 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், நெல்லையில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால், நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 329 ஆக உயர்ந்து உள்ளது. ஊரடங்கால் தமிழகம் உள்பட நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டு இருந்த விமான சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.  இதனால், வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.  இதனை தொடர்ந்து, நெல்லையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது என கூறப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி 63 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து 10 நாட்களுக்கு நோய் தொற்று கண்டறியப்படாமல் இருந்தது. இந்நிலையில் மே 5-ம் தேதி மேலப்பாளையத்தில் கர்ப்பிணிக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு வந்தது. கடந்த 20 நாட்களில் பாதிப்பு 200-க்கும் அதிகமானதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 282 ஆக உயர்ந்திருந்தது. மாவட்டத்தில் நோய் பாதிக்கப்பட்ட 282 பேரில் 94 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியிருக்கிறார்கள். ஒருவர் உயிரிழந்துள்ளார். 187 பேருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : Rice , Coronal infestation, rice rising day, day
× RELATED முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மோடி: பழ.நெடுமாறன்