டெல்லி : வரும் 31ம் தேதியோடு ஊரடங்கு உத்தரவு முடியும் நிலையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிமாகி வரும் சூழ்நிலையில் ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.