×

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் 2 அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் 2 அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத்திற்காக 8.6.2020 முதல் 28.02.2021 வரை நாள் ஒன்றுக்கு 850 கனஅடி/விநாடிக்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் I மற்றும் II அணைகளிலிருந்து தண்ணீரை திறந்து விட ஆணையிடப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனப் பகுதிகளின் 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் கூறினார்.

மேலும் விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற கேட்டுக்கொள்கிறேன் எனவும் கூறினார். கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் சித்தார் 2 அணைகளிலிருந்து கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்கள் கோரிக்கைகள் அளித்தனர். இந்நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று பேச்சிப்பாறை பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் சித்தார் 2 அணைகளிலிருந்து கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட ஆணையிடப்பட்டுள்ளதாக கூறினார்.


Tags : Edappadi Palanisamy ,Perunjani ,Siddhar 1 , Chief Minister Edappadi Palanisamy ,water, dams of Peachiparai, Perunjani, Sitar 1 and 2
× RELATED குமரி முழுவதும் பரவலாக மழை பெருஞ்சாணி...