டெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று ராகுல்காந்தி கேள்வி கேட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் கொரோனா நோய்த் தொற்று குறையும் என அரசு கூறியது. ஆனால் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.