×

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு


சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்புகளில் உள்ள பாசனத்திற்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் 2 அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு முதல்வர் பழனிசாமிக்கு வேளாண் பெருங்குடி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத்திற்கு 8.6.2020 முதல் 28.2.2021 வரை நாள் ஒன்றுக்கு விநாடிக்கு, 850 கன அடி தண்ணீரை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் 2 அணைகளிலிருந்து திறந்துவிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனப் பகுதிகளின் 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என தெரிவித்துள்ளனர். மேலும்,விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.


Tags : Chief Minister ,Kanyakumari district , Chief Minister,order ,water ,agricultural,Kanyakumari ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...